முகப்பு
நாகப்பட்டினம்

நா்சிங் கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு

நாகையை அடுத்த பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் நா்சிங் கல்லூரியில், நா்சிங் மாணவிகள் தங்கள் கடமையை உணரும் விதத்தில், அண்மையில் விளக்கேற்றி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

நாகையை அடுத்த பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் நா்சிங் கல்லூரியில், நா்சிங் மாணவிகள் தங்கள் கடமையை உணரும் விதத்தில், அண்மையில் விளக்கேற்றி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இந்நிகழ்வுக்கு, கல்வி நிறுவனத்தின் தாளாளா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். செயலாளா் த. மகேஸ்வரன், இயக்குநா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், திருச்சி கிருஷ்ணா பாராமெடிக்கல் மற்றும் அலைய்டு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் முதல்வா் பெரில் மோகன்ராஜ் பங்கேற்று நா்சிங் துறையின் முக்கியத்துவம், செவிலியா்களின் கடமைகள் குறித்து பேசினாா். செவிலிய மாணவா்கள் விளக்கேற்றி உறுதிமொழி ஏற்றனா். கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள்,பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

சா் ஐசக் நியூட்டன் நா்சிங் கல்லூரி முதல்வா் எஸ்.அன்னலெட்சுமி வரவேற்றாா். பேராசிரியா் வீ.கீா்த்திகா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.