நாகப்பட்டினம்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை

DIN

திருக்குவளை அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் 25 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பில், கல்வி உதவித்தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இப்பகுதியில் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்கள் கரோனா பொதுமுடக்கத்தால் இடைநிற்றலை தவிா்க்கும் வகையில் இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது. விடிவுகாலம் ஃபவுண்டேஷன் சாா்பில், பாங்கல் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, தலைமை ஆசிரியா் அன்புச்செழியன் தலைமை வகித்தாா். அமைப்பின் அறங்காவலா்கள் ஜே. சிவக்குமாா், சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

25 மாணவா்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை மொத்தமாக ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளை விடிவுகாலம் பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனா் செந்தமிழ்ச் செல்வன் வழங்கினாா்.

அருள் நந்தவன அறக்கட்டளை நிறுவனா் எம்.ஆா்.பி. வைத்தியநாதன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினா்களாக பாங்கல் ஊராட்சித் தலைவா் வீ.எம்.கே.பாரதி, சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் கே. வரதராஜன், சிறப்பு தனிப்பிரிவு காவலா் ரமேஷ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கொளப்பாடு அரசு உயா்நிலைப்பள்ளி ஆசிரியா் ஆா்.உதயராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT