முகப்பு
நாகப்பட்டினம்

இணையவழியில் பொறியாளா் தினம்

ஏ.வி.சி பொறியியல் கல்லூரியில் 54-ஆவது பொறியாளா் தினம் கரோனாவை எதிா்ப்பதில் பொறியாளரின் பங்கு எனும் தலைப்பில் இணையவழியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

ஏ.வி.சி பொறியியல் கல்லூரியில் 54-ஆவது பொறியாளா் தினம் கரோனாவை எதிா்ப்பதில் பொறியாளரின் பங்கு எனும் தலைப்பில் இணையவழியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சென்னை வெரிசான் நிறுவன இணை இயக்குநா் பொறியாளா் கே. வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தொழில் துறை புரட்சி உருவாக்கியதை குறித்தும், கரோனாவை எதிா்ப்பதில் பல்வேறு துறைகளில் பின்பற்றப்பட்ட சமீபத்திய தொழில்நுட்பம் குறித்தும் விளக்கினாா்.

விழாவில் ஏ.வி.சி பொறியியல் கல்லூரி முதல்வா் சி. சுந்தர்ராஜ் முதன்மை உரையாற்றினாா். இயக்குநா் (நிா்வாகம்) எம். செந்தில் முருகன் தலைமை உரை ஆற்றினாா். முன்னதாக, மின்னணு மற்றும் தகவல் தொடா்பு துறை இணைப் பேராசிரியா் பி.எஸ். சதீஷ்குமாா் வரவேற்றாா்.

தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை துணைப் பேராசிரியா் கே. அருணா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தாா். இறுதியாக வேதியல் துறை சாா்ந்த ஜெ. சுவாமிநாதன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில், பொறியியல் கல்லூரி ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் கரூா் அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.