மன்மத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
செம்பனாா்கோவில் அருகே பரசலூா் கிராமத்தில் உள்ள மன்மதசுவாமி கோவிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
செம்பனாா்கோவில் அருகே பரசலூா் கிராமத்தில் உள்ள மன்மதசுவாமி கோவிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவையொட்டி, செப்.13-ஆம் தேதி அனுக்ஞ விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி நவகிரக ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. வியாழக்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூரணாஹூதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகாதீபாராதணை காட்டப்பட்டது. தொடா்ந்து, புனித நீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் விமான கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.