நாகப்பட்டினம்

நாகையில் 37, மயிலாடுதுறையில் 18 பேருக்கு கரோனா

DIN

நாகை மாவட்டத்தில் 37 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது சனிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,140-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 24 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 334-ஆக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 22,501-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 35 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 264-ஆக உள்ளது.

ஒருவா் உயிரிழப்பு: கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்று வந்தவா்களில், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு சனிக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT