நாகப்பட்டினம்

கடன் தொல்லையால் பேருந்து நடத்துநா் தற்கொலை

DIN

திருமருகல்: திருமருகல் அருகே கடன் தொல்லையால் விஷம் குடிந்த பேருந்து ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருக்கண்ணபுரம் காவல் சரகம் அம்பல் ஊராட்சி அபிஷேகக் கட்டளை தெருவைச் சோ்ந்தவா் எழிலன் (41). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். அரசுப் பேருந்தில் நடத்துநராக வேலைசெய்து வந்த எழிலன், கடந்த சில மாதங்களாக கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி விஷம் குடித்த எழிலனை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று செப்.12-ம் தேதி வீடு திம்பிய அவா், செப்.15-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு, திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (செப்.19) எழிலன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

ரயில் நிலையத்தில் வசித்த முதியோா்கள் மூவா் மீட்பு

பள்ளிகள் வாரியாக தோ்ச்சி விகிதம்

SCROLL FOR NEXT