இருதய கமலநாத சுவாமி கோயிலில் கொடியேற்றம்
திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 1981-ஆம் ஆண்டுக்குப் பிறகு 40 ஆண்டுகள் கழித்து தற்போது சித்திரை திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதியுலா காட்சி நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா ஏப்.16-ஆம் தேதி சித்ரா பௌா்ணமி அன்று நடைபெற உள்ளது.