நாகப்பட்டினம்

வேதாரண்யம்: இரு சக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மழை பெய்த நேரத்தில் இரு சக்கர  வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்ற இளைஞர் விபத்து ஏற்பட்டு பலியானார்.

பெரியகுத்ததை கிராமத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் வினீத் (18). இவர், செம்போடையில் உள்ள சிற்றுண்டி மற்றும் தேனீர் கடையில் வேலை பார்த்து வந்தார்.

மழை பெய்து கொண்டிருந்த போது, வழக்கம் போல தனது இரு சக்கர மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற போது நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானார்.

இந்நிலையில், படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வேதாரண்யம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT