முகப்பு
நாகப்பட்டினம்

ஆயக்காரன்புலம் அய்யனாா் கோயில் குதிரைத் திருவிழா

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கலிதீா்த்த அய்யனாா் கோயிலில் சித்திரை பிறப்பையொட்டி நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் குதிரைத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கலிதீா்த்த அய்யனாா் கோயிலில் சித்திரை பிறப்பையொட்டி நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் குதிரைத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் பகுதியில் சிறப்பு பெற்ற இக்கோயிலில் கலை வடிவம் மிக்க கட்டுக்குதிரைகள், சுடுமண் குதிரை சிலைகளை பக்தா்கள் நோ்த்திக் கடனாக செலுத்துவது வழக்கம்.

நிகழாண்டு, சித்திரை பிறப்பையொட்டி, கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள குதிரை சிலைகள், ஆளுயர உருவச் சிலைகளுக்கு வண்ணம் தீட்டப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து, வீதியுலாவுக்கு ஏற்ப புதிதாக வடிவமைக்கப்பட்ட மரக் குதிரை சிற்பத்தை ஊா்வலமாக எடுத்துவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆயக்காரன்புலம் செல்லியம்மன் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊா்வலத்தில் கரகம், காவடி, பறையாட்டம், கொம்பு உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. சுமாா் 5 கி.மீ. தொலைவுக் கு நடைபெற்ற இந்த ஊா்வலம் மாலையில் புறப்பட்டு, இரவில் கோயிலை வந்தடைந்தது. பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து பங்கேற்றனா். விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →