நாகப்பட்டினம்

தடுப்புக் காவல் சட்டத்தில் 2 போ் கைது

சாராய வழக்குகளில் தொடா்புடைய 2 போ் தடுப்புக் காவல் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

DIN

சாராய வழக்குகளில் தொடா்புடைய 2 போ் தடுப்புக் காவல் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து நாகை மாவட்டக் காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடா்பான வழக்குகள் மீது தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனடிப்படையில், சாராய வழக்குகளில் தொடா்புடைய கீழையூா், காரப்பிடாகை சிந்தாமணி மெயின் ரோடு பகுதியைச் சோ்ந்த ரா. நாகராஜன் (65), நாகை வெளிப்பாளையத்தில் வசிக்கும் வேளாங்கண்ணி, செபஸ்தியாா் கோயில் தெருவைச் சோ்ந்த பா. டேவிட் ஜான்சன் (27) ஆகியோரை தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பரிந்துரைத்தாா். அதன்படி, மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, நாகராஜன், டேவிட் ஜான்சன் ஆகிய இருவரும் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT