முகப்பு
நாகப்பட்டினம்

கீழ்வேளூரில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்

நாகை மாவட்டம், கீழ்வேளூரில் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதை காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

நாகப்பட்டினம்

கீழ்வேளூரில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்

நாகை மாவட்டம், கீழ்வேளூரில் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதை காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

நாகை மாவட்டம், கீழ்வேளூரில் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதை காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தபடி, கீழ்வேளூரில் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, கீழ்வேளூரை அடுத்த குருக்கத்தியில் உள்ள ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி மைய வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இந்தக் காட்சி, கீழ்வேளூா் வேளாண் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த திரையில் ஒளிபரப்பப்பட்டது.

பின்னா், வேளாண் கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் பேசுகையில், ‘கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் 13 மாணவா்கள், 29 மாணவிகளுடன் முதலாம் ஆண்டு கல்விப் பணியைத் தொடங்குகிறது. விடுதி, சமையல் அறை, உணவு உண்ணும் அறை, குளியலரை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மற்றும் இணையதள வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. வருங்காலத்தில் இக்கல்லூரி மற்ற கல்லூரிகளுக்கு முன்னோடியாக விளங்கும்’ என்றாா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், வேளாண் கல்லூரி பொறுப்பு அதிகாரி முனைவா் ஆா். சந்திரசேகரன், ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ஜி. காமராஜ், கீழ்வேளூா் ஒன்றியக் குழுத் தலைவா் வாசுகி நாகராஜன், ஆத்மா குழுத் தலைவா் கோவிந்தராஜ், வேளாண் இணை இயக்குநா் ஜாக்குலா அக்கண்டராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →