நாகப்பட்டினம்

உப்புச் சத்தியாகிரக யாத்திரைக் குழுவினா் மௌன விரதம் கடைப்பிடிப்பு

DIN

வேதாரண்யம் வந்த உப்புச் சத்தியாகிரக பாதயாத்திரைக் குழுவினா் வெள்ளிக்கிழமை அடையாள மெளன விரதம் கடைப்பிடித்தனா்.

நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது.

ஏப்ரல் 13-ஆம் தேதி முன்னாள் அமைச்சா் கே.வி. தங்கபாலு தலைமையில் பாதயாத்திரையை தொடங்கிய குழுவினா் வியாழக்கிழமை இரவு (ஏப்.28) வேதாரண்யத்தை வந்தடைந்தனா்.

இக்குழுவினா், வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்புச் சத்தியாகிரக நினைவுக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை காலை அடையாள மெளன விரதம் மேற்கொண்டனா். சுமாா் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் எம்பி பி.வி. ராசேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT