வேதாரண்யம் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் (இந்து) பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு மற்றும் புதிய பொறுப்பாளா்கள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
தலைமையாசிரியா் சு. தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். வேதாரண்யம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா். சுவாமிநாதன் முன்னிலை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக எம். நிஷாந்தி, துணைத் தலைவராக எம். உமாமகேஸ்வரி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கோ. அம்சவள்ளி, ஷே. அனீஸ் பாத்திமா உள்ளிட்ட 20 போ் கொண்ட குழுவினா் தோ்வு செய்யப்பட்டனா்.
நிகழ்ச்சியில், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜி. கோவிந்தராஜுலு, துணைத் தலைவா் வீரராசு, இணைச் செயலாளா் வெற்றிவேல் ஆகியோா் பேசினா்.