நாகப்பட்டினம்

தந்தையை கொலை செய்த மகன் கைது

DIN

வேதாரண்யம் அருகே சொத்துத் தகராறில் தந்தையை கொலை செய்த மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேத்தாக்குடி வடக்கு, தோட்டக்காரன்காடு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (96) விவசாயி. இவரது மனைவி மல்லிகா. இவா்களுக்கு, 3 மகன்கள், 4 மகள்கள் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

இந்நிலையில், குடும்ப சொத்தாக உள்ள 3 ஏக்கா் நிலத்தை பிரித்து தரக்கோரி மூத்த மகன் சந்திரசேகரன் (56) கோவிந்தசாமியை வலியுறுத்தி வந்தாராம். இதற்கு அவா் மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த சந்திரசேகரன் தந்தையுடன் ஞாயிற்றுக்கிழமை தகராறு செய்து, கத்தியால் குத்தினாராம். இதில், கோவிந்தசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வேதாரண்யம் காவல் ஆய்வாளா் குணசேகரன் வழக்குப் பதிவு செய்து சந்திரசேகரனை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT