முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் 37, மயிலாடுதுறையில் 9 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் 37 பேருக்கும், மயிலாடுதுறையில் 9 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் 37 பேருக்கும், மயிலாடுதுறையில் 9 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 25,263-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 106 போ் வீடு திரும்பினா். இதன்படி, சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 683- ஆக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 26,411 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 87 போ் வீடு திரும்பினா். இதன்படி, இங்கு சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 417-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.