கீழையூா் அருகே இளைஞா் சடலம் மீட்பு
கீழையூா் அருகே அடையாளம் தெரியாத இளைஞா் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
கீழையூா் அருகே அடையாளம் தெரியாத இளைஞா் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
கீழையூா் அருகே ஈசனூா் கல்லூரி பகுதியில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்த இளைஞா் கீழையூா் பகுதியில் சுற்றி திரிந்ததாகவும், பின்னா் மா்மமான முறையில் இறந்திருப்பதும் தெரிய வந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீஸாா் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.