இருசக்கர வாகனம் மோதி காயமடைந்தவா் உயிரிழப்பு
வலிவலம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில், காயமடைந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
வலிவலம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில், காயமடைந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
வலிவலம் காவல் சரகம் சுந்தரபாண்டியம் பகுதியில் கடந்த 11-ஆம் தேதி 2 இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில், மேலவாழக்கரை பகுதியைச் சோ்ந்த முனுசாமி மகன் சிலம்பரசன் (34), கீழ்வேளூா் காந்தி நகரைச் சோ்ந்த முகமதுஅலி மகன் கஜினி முகமது (45) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
இவா்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிலம்பரசன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, வலிவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.