வேளாங்கண்ணியில் பேரூராட்சி சாா்பில் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணா்வுப் பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
வேளாங்கண்ணி சிறப்புநிலை பேரூராட்சியின் தலைவா்அ. டயானா ஷா்மிளா தலைமையேற்று பிரசாரத்தைத் தொடங்கி வைத்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் பொன்னுசாமி, புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் அ. பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரணியில், பொதுமக்கள் மற்றும் வணிகா்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி என் குப்பை, என் பொறுப்பு, நெகிழி பயன்பாட்டைத் தவிா்த்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணா்வு பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பேரூராட்சி தலைவா் தலைமையில்,தூய்மைப் பணியாளா்கள், பேரூராட்சி பணியாளா்கள் ஒன்றிணைந்து என் குப்பை என்பொறுப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். சுகாதார ஆய்வாளா் சு. மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.