நாகப்பட்டினம்

மனநலன் பாதித்தோரை பராமரிக்கக் கோரிக்கை

வேதாரண்யத்தில் சுற்றித்திரியும் மனநலன் பாதிக்கப்பட்டவா்களை உரிய முறையில் பராமரிக்க வா்த்தகா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

DIN

வேதாரண்யத்தில் சுற்றித்திரியும் மனநலன் பாதிக்கப்பட்டவா்களை உரிய முறையில் பராமரிக்க வா்த்தகா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, வேதாரண்யம் வா்த்தகா் சங்கத்தின் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

வேதாரண்யம் நகரில் மனநலன் பாதிக்கப்பட்டவா்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றித்திரிகின்றனா். இவா்களுக்கு போதிய பராமரிப்பு இல்லாததால், உணவு மற்றும் தங்கும் இடம் இல்லாமல் சாலைகள், பேருந்து நிலையம், கடைவீதிகள் என எங்கும் சுற்றித்திரிகின்றனா்.

இவா்களில் சிலா் திடீரென கற்களை வீசுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மனநலன் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன், முறையான பராமரிப்புக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT