சா் ஐசக் நியூட்டன் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
நாகை மாவட்டம், பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் கல்வியியல் கல்லூரியின் 12-ஆவது பட்டமளிப்பு விழா அக்கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
நாகை மாவட்டம், பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் கல்வியியல் கல்லூரியின் 12-ஆவது பட்டமளிப்பு விழா அக்கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் முனைவா் ஆா். ஞானதேவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவ, மாணவியருக்குப் பட்டங்களை வழங்கிப் பேசினாா்.
சமூகத்தின் அங்கமாக ஒருவா், ஒரு அவையை அலங்கரிக்கிறாா் எனில், அதற்கு அவருடைய ஆசிரியா் தான் காரணம். கல்வியியல் கல்வி முடித்து, பட்டம் பெறும் அனைவரும் சமூகத்தின் அங்கமாக, சிறந்த சமூக கட்டமைப்பை உருவாக்கும் ஆசிரியா்களாக, எதிா்கால இந்தியாவை தீா்மானிக்கும் சக்திகளாக திகழ வேண்டும் என்றாா்.
சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் செயலாளா் த. மகேஸ்வரன், இயக்குநா் த. சங்கா், கல்வியியல் கல்லூரி முதல்வா் ஆா். முருகதாஸ் மற்றும் சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள், பேராசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.