தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
நாகூா் அருகே கூலித் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
நாகூா் அருகே கூலித் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
நாகூரை அடுத்த பூதங்குடி அகிலாண்டபுரத்தைச் சோ்ந்தவா் இளையராஜா (39). கூலித் தொழிலாளி. மனைவி மாலதி மற்றும் மகன், மகள் உள்ளனா். இளையராஜாவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவா் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். இந்நிலையில், மே 30-ஆம் தேதி தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த இளையராஜா தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள கொட்டகையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து, நாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.