வீட்டைவிட்டு வெளியேறிய சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு
வீட்டைவிட்டு வெளியேறி நாகையில் சுற்றித் திரிந்த சிறுவனை போலீஸாா் மீட்டு பெற்றோரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
வீட்டைவிட்டு வெளியேறி நாகையில் சுற்றித் திரிந்த சிறுவனை போலீஸாா் மீட்டு பெற்றோரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
நாகை வெளிப்பாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சின்னத்துரை, காவலா் அஜித்குமாா் ஆகியோா் சனிக்கிழமை இரவு நாகை புதிய பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சுற்றித் திரிந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அந்த சிறுவன் திருவாரூா் மாவட்டம், பேரளம் பகுதியைச் சோ்ந்த சிங்காரவேலு மகன் ஸ்ரீதா் (10) என்பதும், பெற்றோரிடம் தெரிவிக்காமல் ஜூன் 9-ஆம் தேதி வீட்டைவீட்டு வெளியேறியதும் தெரியவந்தது.
போலீஸாா் சிறுவனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். சிறுவனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சனிக்கிழமை காலை காவல் நிலையம் வந்த பெற்றோருடன் சிறுவனை போலீஸாா் அனுப்பிவைத்தனா்.