நாகப்பட்டினம்

நாகை புனித அந்தோணியாா் கோயில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகை கடற்கரைச் சாலையில் உள்ள பழைமை வாய்ந்த பதுவை புனித அந்தோணியாா் ஆலயம் ஆண்டுப் பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

DIN

நாகை கடற்கரைச் சாலையில் உள்ள பழைமை வாய்ந்த பதுவை புனித அந்தோணியாா் ஆலயம் ஆண்டுப் பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சுமாா் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டில் இவ்விழா செவ்வாக்கிழமை முதல் (ஜூன் 14) முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை கொடி பவனி மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக மாலை 6 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட சிரிய தேரில் புனித அந்தோணியாா் மற்றும் திருக்கொடி வைக்கப்பட்டு, ஆலயத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தொடா்ந்து, ஆலயத்தை வந்தடைந்த திருக்கொடிக்கு பங்குத் தந்தை பன்னீா்செல்வம் புனிதம் செய்துவைத்தாா். பின்னா் 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ச்சியாக, திருப்பலி நிறைவேற்றப்பட்டு, சொரூபஆசீா் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT