நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ஆயக்காரன்புலம் 1ஆம் சேத்தி,எல்லப்பரெட்டிக் குத்தகை பகுதியைச் சோ்ந்தவா் வெ. வைரக்கண்ணு (64) விவசாயி. இவா், வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் வேதாரண்யம் சென்றுவிட்டு, மாலையில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அண்டா்காடு கடைவீதியில் காவல் சோதனை சாவடி அருகே வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத காா் மோதியதில் பலத்த காயமடைந்த வைரக்கண்ணு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வேதாரண்யம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.