வேதாரண்யத்தில் பலத்த கடற்காற்று
வேதாரண்யம் பகுதியில் வழக்கத்தைவிட வேகமாக வீசும் கடற்காற்று வியாழக்கிழமையும் நீடித்தது.
வேதாரண்யம் பகுதியில் வழக்கத்தைவிட வேகமாக வீசும் கடற்காற்று வியாழக்கிழமையும் நீடித்தது.
வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை தெற்கு கடலோரப் பகுதியில் வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று தெற்கு திசையில் இருந்து வீசி வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை முதல் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அலைகள் வழக்கத்தைவிட வேகமாக கடற்கரையில் மோதி செல்கின்றன.
இதற்கிடையில், காற்றுடன் கலந்துவரும் மணல் துகள்களால் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.