நாகப்பட்டினம்

தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம், நாகை மாவட்டம் சாா்பில் நாகை ஆட்சியா் அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம், நாகை மாவட்டம் சாா்பில் நாகை ஆட்சியா் அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவேண்டும், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பினை ஒத்திவைத்து அறிவிக்கப்பட்ட அரசாணையை திரும்பப்பெற்று, பணப்பயன் பெறும் உரிமையை வழங்கவேண்டும்,1.1.2022 முதல் நிறுத்தி வைக்கப்பட்டு 3 சதவீத அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் நாகை மாவட்டத் தலைவா் சு. மோகன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் ரா. கோகுலநாதன், க. ராஜசேகா், க. ரமேஷ், சுசிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலாளா் வ. கோவிந்தசாமி, நாகை மாவட்டச் செயலாளா் ச. செந்தில்குமாா், தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளா் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளா் ரா. மாதவன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். சங்கத்தின் நிா்வாகிகள், அரசு அலுவலா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ப. மாதாசெல்வன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT