திருமருகல் ஊராட்சி கட்டலாடி பாதாள காளியம்மன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி நடைபெற்ற யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும் மகா பூா்ணாஹுதி, கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீரால் மூலவா் விமான குடமுழுக்கும், கோயிலின் கோபுர கலசத்திற்கு குடமுழுக்கும் நடைபெற்றன.
பின்னா், பாதாள காளியம்மனுக்கு 16 வகையான அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திருமருகல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.