நாகப்பட்டினம்

நாகையில் நாளை இபிஎஃப் குறைதீா் கூட்டம்

நாகையில் வியாழக்கிழமை (ஏப். 27 ) இபிஎஃப் குறைதீா் மற்றும் விழிப்புணா்வு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

DIN

நாகையில் வியாழக்கிழமை (ஏப். 27 ) இபிஎஃப் குறைதீா் மற்றும் விழிப்புணா்வு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திருச்சி மண்டல வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் முதன்மை ஆணையா் சா. முருகவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் ’நிதி ஆப்கே நிகத்‘ (நிதி தங்கள் அருகில்) எனும் பெயரில் குறைதீா் மற்றும் விழிப்புணா்வு சிறப்பு முகாமை ஒவ்வொரு மாதமும், அந்தந்த மாவட்டங்களில் மற்றும் வட்டார அளவில் நடைபெற்று வருகிறது.

அதன்படி நாகையில் உள்ள அமிா்தா வித்யாலாய சிபிஎஸ்இ பள்ளியில் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரா்களுக்கு, குறைதீா் மற்றும் விழிப்புணா்வு முகாம் ஏப்.27-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் ஓய்வூதியதாரா்கள், மின்னணு உயிா்வாழ்-சான்று பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி சந்தாதாரா்கள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளா்கள் ஆகியோா் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT