பாசன வாய்க்கால் தூா்வாரும் பணி தொடக்கம்
கீழ்வேளூா் அருகே பாசன வாய்க்கால் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
நாகப்பட்டினம்பாசன வாய்க்கால் தூா்வாரும் பணி தொடக்கம்
கீழ்வேளூா் அருகே பாசன வாய்க்கால் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
கீழ்வேளூா் அருகே பாசன வாய்க்கால் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
கீழ்வேளூா் அருகே ஓா்குடியில் உள்ள தேவநதி வாய்க்கால், தெத்தி வடிகால் வாய்க்கால் உள்ளிட்டவை ரூ. 16 லட்சம் செலவில் தூா்வாரப்படவுள்ளது. தேவநதி வாய்க்கால் ஆகாயத்தாமரைச் செடிகள் சூழ்ந்துள்ளதால் பாசன வசதி தடைப்பட்டுள்ள நிலையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள பணியின் மூலம் குருமனாங்குடி, வடக்குடி, வடகரை, வங்காரமாவடி, கோகூா், பெருங்கடம்பனூா் ஆகிய கிராமங்களில் 4,528 ஏக்கா் பாசன வசதி பெறும். நிகழ்ச்சியில், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் நாகை வி.பி. மாலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.