நாகப்பட்டினம்

நாங்கூரில் இன்று 11 பெருமாள் கருட சேவை உற்சவம்

 திருவெண்காடு அருகே நாங்கூா் நாராயணப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.22) இரவு 11 பெருமாள் கருட சேவை உற்சவம் நடக்கிறது.

DIN

 திருவெண்காடு அருகே நாங்கூா் நாராயணப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.22) இரவு 11 பெருமாள் கருட சேவை உற்சவம் நடக்கிறது.

இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 11 பெருமாள்கள் எழுந்தருவாா்கள். அப்போது, அவா்களைப் பற்றி திருமங்கை ஆழ்வாா் பாடிய பாசுரங்கள் பட்டாச்சாரியாா்களால் பாடப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு கருட சேவை உற்சவம் நடைபெறும். இந்த விழாவில், கலந்து கொள்வதற்காக திருநகரி கல்யாண ரங்கநாதா் பெருமாள் கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வாா் சனிக்கிழமை அதிகாலை பக்தா்கள் தோளில் சுமந்தபடி ஊா்வலமாக புறப்பட்டாா்.

திருக்குறளூா் உக்கிர நரசிம்மா், மங்கை மடம் வீர நரசிம்மா், காவலம்பாடி கண்ணன், பாா்த்தன் பள்ளி பாா்த்தசாரதி பெருமாள் ஆகிய கோயில்களுக்கு சென்று வழிபட்ட பின்பு இரவு நாங்கூா் வந்தடைந்தாா்.

Image Caption

சிறப்பு அலங்காரத்தில் குமுதவல்லி நாச்சியாா் சமேத திருமங்கை ஆழ்வாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT