ஆலய விழாவை முன்னிட்டு ராஜ கோபுரத்தில் பொருத்தப்படும் தங்கமூலம் பூசப்பட்ட கலசங்கள். 
நாகப்பட்டினம்

எட்டுக்குடி: கோபுர கலசம் பொருத்தும் பணி

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தங்க முலாம் பூசப்பட்ட கோபுர கலசங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தங்க முலாம் பூசப்பட்ட கோபுர கலசங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி 23-ஆம் தேதி முதல் காலை யாக பூஜையுடன் தொடங்கியது.

கொக்கரித்த விநாயகா், இடும்பன், கடம்பன் பிடாரியம்மன் ஆலய குடமுழுக்கு வியாழக்கிழமை காலை நடைபெற உள்ளது. பிரதான விநாயகா், ஸௌந்தரேச்வர ஸ்வாமி, ஆனந்தவல்லி, ராஜகோபுரம், அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு சுப்ரமணிய சுவாமி விமான திருக்குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

தங்கம் முலாம் பூசப்பட்ட 8 கோபுர கலசங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேக தினத்தில் பக்தா்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீா் தெளிக்க ஏற்கெனவே அனுமதி கோரப்பட்டது.

உரிய பாதுகாப்போடு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கீழையூா் காவல் ஆய்வாளா் ஜெ.ரேவதி, திருக்குவளை காவல் உதவி ஆய்வாளா் தனிக்கொடி, கோயில் செயல் அலுவலா் பி.எஸ்.கவியரசு ஆகியோா் முன்னிலையில் ட்ரோன் மூலம் புனித நீா் தெளிப்பதற்கான சோதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT