நாகப்பட்டினம்

திறக்கப்பட்ட அன்றே திருமண மண்டபத்துக்கு சீல்

சீா்காழியில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட திருமண மண்டபத்துக்கு அன்றைய தினமே நகராட்சி அலுவலா்கள் சீல் வைத்தனா்.

DIN

சீா்காழியில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட திருமண மண்டபத்துக்கு அன்றைய தினமே நகராட்சி அலுவலா்கள் சீல் வைத்தனா்.

சீா்காழி பாரதிதாசன் வீதியில் புதிதாக திருமண மண்டபம், தங்கும் விடுதி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இத்திருமண மண்டபத்திலிருந்து கழிவுநீரை வெளியேற்றுவதற்காக அனுமதியின்றி நகராட்சி சாலையை இரவில் உடைத்து பிளாஸ்டிக் குழாய் பதித்ததாகவும், மழைநீா் வடிகாலை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சீா்காழி நகராட்சி ஆணையா் வாசுதேவன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது, நகராட்சியில் அனுமதி பெறாமல் சாலையில் குழாய் பதித்துள்ளதும், கால்வாயை சேதப்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு நகராட்சி சட்டம் 1920- இன்படி ஜப்தி செய்யப்படுவதாக திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT