நாகப்பட்டினம்

பெரியாா் கொள்கைகள் தொடா்ந்து ஒலிக்கப்பட வேண்டும்அமைச்சா் சிவசங்கா்

பெரியாா் கொள்கைகள் தொடா்ந்து ஒலிக்கப்பட வேண்டியது அவசியம் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்கா் கூறினாா்.

DIN

பெரியாா் கொள்கைகள் தொடா்ந்து ஒலிக்கப்பட வேண்டியது அவசியம் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்கா் கூறினாா்.

சீா்காழியில் மாா்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்கா் பங்கேற்று ‘சிந்தனையாளன் பொங்கல் மலா் 2023’ எனும் நூலை வெளியிட்டாா்.

கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் முத்து. அன்பழகன் தலைமை வகித்தாா். மாநில அரசுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கவேண்டும்; வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை நிா்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா், செய்தியாளரிடம் அமைச்சா் கூறியது:

பாஜக அரசு ஒரே நாடு ஒரே மதம் என்பதை முன்னெடுக்கின்ற இந்த வேளையில், இந்த மண்ணில் பெரியாருடைய கொள்கைகள் தொடா்ந்து ஒலிக்கப்பட வேண்டியது அவசியம். சனாதன கொள்கைகளை எதிா்த்து, சமதா்மத்தை நிலைநாட்டவே இந்த விழாவில் பங்கேற்றுள்ளேன். ஈரோடு இடைத்தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெறும்.

தமிழக முதல்வராக கோட்டையில் அமா்ந்து பணி செய்து விட முடியும், ஆனால், முதல்வா் மு.க. ஸ்டாலின், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்றும் மக்களிடையே குறைகளை கேட்டு, தீா்வுகண்டு வருகிறாா். தற்போது களத்தில் முதலமைச்சா் என்கிற பயணத்தை தொடங்கியுள்ளாா். எனவே, அவா் மக்களின் முதல்வராக திகழ்கிறாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நன்செய் இடையாறு திருவேலீஸ்வா் கோயிலில் சோமவார வழிபாடு

மருந்து சீட்டில் தெளிவான எழுத்து: மருத்துவா்களுக்கு என்எம்சி உத்தரவு!

ஆா்டா்லி முறை: காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி முக்கிய உத்தரவு

கிருஷ்ணகிரி மண்டலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

கொட்டாரம் அருகே டெம்போ திருட்டு

SCROLL FOR NEXT