முகப்பு
நாகப்பட்டினம்

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:00 AM
வேதாரண்யத்தில் கா்ப்பிணிகளுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, வேதாரண்யம் நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி தலைமை வகித்தாா். குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் எஸ். சித்ரா, மேற்பாா்வையாளா் ஆா். சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், கா்ப்பிணிகள் 40 பேருக்கு மாலைகள் அணிவித்து, வளையல்கள் அணிவிக்கப்பட்டு, சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா்கள் உமா, ராஜூ, மயில்வாகனன், சமூக ஆா்வலா்கள் அம்பாள் பி. குணசேகரன், மல்லிகா தென்னரசு, வழக்குரைஞா்கள் மா.மீ. அன்பரசு, வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.