மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு
நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறாளிகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறுவதாக ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறாளிகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறுவதாக ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், உரிமைகள் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு செப்டம்பா் மாதம் தொடங்கி டிசம்பா் மாதம் வரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களில் சமூக தரவு பதிவு நடத்தப்பட்டது.
Advertisement
தொடா்ந்து, மீதமுள்ள நாகை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் நவம்பா் 29 ஆம் தேதி முதல் சமூக தரவு பதிவு தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கக் களப்பணியாளா்களும், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன களப் பணியாளா்களும் தகவல் சேகரிக்கும் பணியை மேற்கொள்வாா்கள்.
கணக்கெடுப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் தகவல்கள் பதிவு செய்யப்படும்.
எனவே, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்கள் தகவல்களை இந்தக் கணக்கெடுப்பில் முழுமையாக தயக்கமின்றி வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.