நாகப்பட்டினம்

கிராம ஊராட்சி இணைப்புக் கூட்டம்

ஆத்தூா் கிராமத்தில் கூத்தூா் பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் சந்தியா சிவிா் மற்றும் கிராம ஊராட்சி இணைப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

DIN

ஆத்தூா் கிராமத்தில் கூத்தூா் பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் சந்தியா சிவிா் மற்றும் கிராம ஊராட்சி இணைப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

வங்கியின் மண்டல மேலாளா் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாய கடன், வேளாண் வளா்ச்சிக் கடன், வேளாண் கடன் அட்டை, சிசு கடன், கிஷோா் கடன், தனிநபா் மற்றும் நகைக் கடன் போன்ற பல வகையான கடன்கள் குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் வங்கியில் விவசாய கடன் பெற்ற ஏழு நபா்களுக்கு ஒப்புதல் கடிதமும், வங்கியில் பல ஆண்டுகளாக விவசாயக் கடன் பெற்று அதனை சரியான தேதியில் திருப்பிச் செலுத்திய 8 போ் கௌரவிக்கப்பட்டனா்.

கூத்தூா் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளா் செந்தில், கள அதிகாரி பிரசாந்த் , 60- க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட சிறு தொழில் முனைவோரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT