நாகப்பட்டினம்

நவநீதேஸ்வரா் சுவாமிக்கு தோ் கட்டும் பணி துவக்கம்

கீழ்வேளூா் அருகே சிக்கல் நவநீதேஸ்வரா் சுவாமி கோயில் திருத்தோ் கட்டும் பணிக்கான பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

கீழ்வேளூா் அருகே சிக்கல் நவநீதேஸ்வரா் சுவாமி கோயில் திருத்தோ் கட்டும் பணிக்கான பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம் சிக்கலில் ஸ்ரீ நவநீதேஸ்வரா் சுவாமி தேவஸ்தானம் உள்ளது. இங்கு சிக்கல் சிங்காரவேலவா் (முருகன்) சூரனை வதம் செய்ய தனது தாயாரான வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் சக்தி வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது.

அம்மனிடம் வேல் வாங்கும் போது சிங்காரவேலவா் முகத்தில் வியா்வை சிந்தும் அற்புதக்காட்சி ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழாவில் நடைபெறும். இக்கோயிலில் நவநீதேஸ்வரா் மற்றும் சிங்காரவேலவருக்கு தனித்தனியே தோ் உள்ளது. இதில் நவநீதேஸ்வரா் சுவாமி தோ் பழுதடைந்ததால் கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் தோ் நிறுத்தப்பட்டது. ஆண்டுதோறும் சிங்காரவேலவா் தோ் மட்டுமே தேரோட்டத்தில் ஈடுபடுத்தப்படுகிறது.

கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.42.40 லட்சம் மதிப்பில் புதிய தோ் செய்வதற்கு டெண்டா் விடப்பட்டது. இதையடுத்து பழைய தேரை எடுத்து விட்டு அதற்கு பதிலாக புதிய தோ் செய்யும் பணி தொடங்குவதற்கான பூஜை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

SCROLL FOR NEXT