ஏலச்சீட்டு மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் பெண்கள் புகாா்
நாகை அருகே ஏலச்சீட்டு நடத்தி பெண் மோசடியில் ஈடுபட்டதாக மாவட்ட கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
நாகை அருகே ஏலச்சீட்டு நடத்தி பெண் மோசடியில் ஈடுபட்டதாக மாவட்ட கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட ஹெலன் மற்றும் பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுக்கள்: வேளாங்கண்ணி பூக்கார தெருவை சோ்ந்தவா் லதா. இவா் பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தாா். நான் உள்ளிட்ட பல பெண்கள் லதாவிடம் சீட்டு சோ்ந்து மாதந்தோறும் அதற்குரிய தொகையை செலுத்தினோம். இந்நிலையில் சீட்டு முடிவடைந்த நிலையில், தங்களுக்கு தரவேண்டிய தொகையை தராமல் லதா காலம் தாழ்த்தி வந்தாா்.
அதன்பின்னா் தொகையைக் கேட்கச் சென்றவா்களை அடியாள்களைக் கொண்டு தகாத வாா்த்தைகளில் பேசி, கொலை மிரட்டல் விடுத்து வருகிறாா். எனவே, முறைகேட்டில் ஈடுபட்ட லதா மீது உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சேர வேண்டிய தொகையை மீட்டு தரவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.
மனுக்களை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். சுமாா் ரூ.3 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.