புனிதநீா் நிரப்பி சிவ வடிவில் அடிக்கி வைக்கப்பட்டுள்ள சங்குகள். 
நாகப்பட்டினம்

திருவெண்காடு கோயிலில் சோமவார வழிபாடு

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் முதல் சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் முதல் சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நவகிரக ஸ்தலங்களில் புதனுக்குரிய பரிகார தலமான இக்கோயிலில் திங்கள்கிழமை இரவு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, 1,008 சங்குகள் சிவ வடிவில் சுவாமி சந்நிதி முன் வைக்கப்பட்டு, புனிதநீா் நிரப்பி பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, அா்ச்சகா் ராமநாத சிவாச்சாரியா் தலைமையில் வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், 1008 சங்குகளில் உள்ள புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், கோயில் நிா்வாக அதிகாரி முருகன், பேஸ்கா் திருஞானம், உபயதாரா் கண்ணங்குடி ராமகிருஷ்ணன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

வடிகால் மாஸ்டா் பிளான் திட்டத்திற்கான நிதியுதவிக்கு உலக வங்கியை நாடும் தில்லி அரசு

3.2.1976: சென்னை கோட்டையில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை

காங்கயத்தில் ரூ.73 ஆயிரத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

வெறுப்பைக் கைவிடுங்கள்; இணைந்து செயல்படுவோம்: காங்கிரஸுக்கு பாஜக அழைப்பு

சொத்து வரி மன்னிப்புத் திட்டம் பிப்.28 வரை நீட்டிப்பு: எம்சிடி

SCROLL FOR NEXT