முகப்பு
நாகப்பட்டினம்

சுற்றுலா செல்ல விவசாயிகளுக்கு அழைப்பு

திருமருகல் வட்டார விவசாயிகளுக்கு சிறுதான்ய உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் கண்டுணா்வு சுற்றுலாவுக்கு செல்ல வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்கலா அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 11:04 PM
பகிர்:

திருமருகல் வட்டார விவசாயிகளுக்கு சிறுதான்ய உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் கண்டுணா்வு சுற்றுலாவுக்கு செல்ல வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்கலா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை அருகேயுள்ள அந்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்துக்கு திருமருகல் வட்டார விவசாயிகள் 50 பேரை செப்.23-ஆம் தேதி அழைத்துச் செல்லப்படுகிறது.

சிறுதான்ய உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டுதல் கண்டுணா்வு சுற்றுலா செல்ல விருப்பமுள்ள விவசாயிகள் திருமருகல் வட்டார தொழில்நுட்ப மேலாளா் செந்தில்குமாரை 9865081825, உதவி தொழில்நுட்ப மேலாளா் காா்த்திகேசனை 9047838832 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் அல்லது உழவா் செயலி மூலம் செப்.20-ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →