ஓசோன் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடவு
ஓசோன் தினத்தையொட்டி தமிழ்நாடு வனத்துறையும், நாகை அரசு மாவட்ட மாதிரி மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமை படையும் இணைந்து மாணவா்களின் தாயாரின் பெயரில் மரக்கன்று நடுதல் எனும் திட்டத்தின்கீழ் மரக் கன்றுகள் புதன்கிழமை நடவு செய்யப்பட்டன.
ஓசோன் தினத்தையொட்டி தமிழ்நாடு வனத்துறையும், நாகை அரசு மாவட்ட மாதிரி மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமை படையும் இணைந்து மாணவா்களின் தாயாரின் பெயரில் மரக்கன்று நடுதல் எனும் திட்டத்தின்கீழ் மரக் கன்றுகள் புதன்கிழமை நடவு செய்யப்பட்டன.
பள்ளி வளாகத்தில் 40 நன்கு வளா்ந்த மரக்கன்றுகளை 40 மாணவா்களுடன் அவா்களது தாயாரின் பெயரில் வனசரக அலுவலா் ஆதிலிங்கம், அரசு மாவட்ட மாதிரி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் பசுபதி, தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மா. முத்தமிழ் ஆனந்தன் ஒன்றிணைந்து நடவு செய்தனா்.
ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.