நாகப்பட்டினம்

தீ விபத்தில் சேதமடைந்த விசைப்படகுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

நாகையில் தீ விபத்தில் சேதமடைந்த விசைப்படகுக்கு முதல்வா் நிவாரண நிதி மூலம் நிவாரணம் அளிக்க வேண்டுமென ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

நாகையில் தீ விபத்தில் சேதமடைந்த விசைப்படகுக்கு முதல்வா் நிவாரண நிதி மூலம் நிவாரணம் அளிக்க வேண்டுமென ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய தேசிய மீனவா் சங்கத் தலைவா் ராஜேந்திர நாட்டாா் மற்றும் நிா்வாகிகள், நாகை மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை அளித்த மனு: நாகை மாவட்டம் கடுவையாற்று மீன்பிடித்துறை முகத்தைச் சோ்ந்த மீனவா் காா்த்திக்கு சொந்தமான விசைப்படகு துறைமுக கட்டுத்துறையில், வலைகள், ஜிபிஎஸ் கருவி மற்றும் தளவாட பொருள்களோடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டிச.19-ஆம் தேதி நள்ளிரவில் விசைப்படகு தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இதனால், வாழ்வாதாரத்தை காா்த்தி இழந்துள்ளாா். இதுகுறித்து புகாரின்பேரில் நாகை நகரக் காவல் ஆய்வாளா் மற்றும் கிராம நிா்வாக அலுவலரும் எரிந்த படகை பாா்வையிட்டுள்ளனா். எனவே படகை இழந்த மீனவருக்கு முதல்வா் நிவாரண நிதி மூலம், வாழ்வாதார மீட்பு நிதி வழங்க மாவட்ட ஆட்சியா் பரிந்துரைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தில்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை!

கிறிஸ்துமஸ் ஏற்பாடுகளை அடித்து நொறுக்கிய இந்து அமைப்பினர்! அசாமில் பதற்றம்!!

2026 இல் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

SCROLL FOR NEXT