நாகப்பட்டினம்

தா்மராஜா கோயில் குடமுழுக்கு

Syndication

திருமருகல்: திருமருகல் அருகே போலகம் ஊராட்சி கூத்தப்பட்டாா் தோப்பு கிராமத்தில் அருள்பாலிக்கும் தா்மராஜா சமேத திரௌபதி அம்மன் மற்றும் பஞ்சபாண்டவா் கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அக்டோபா் 30-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து 31- ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.

திங்கள்கிழமை அதிகாலை நான்காம் கால பூஜை, தீபாராதனை நிறைவடைந்ததும், காலை 7.15 மணிக்கு கடங்கள் புறப்படாகி, 9 மணியளவில் கோயில் விமானக் குடமுழுக்கு, மூலவா் குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

திருப்புகலூா் வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்நிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல், புத்தகரம் முத்து மாரியம்மன் கோயிலிலும் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT