முகப்பு
நாகப்பட்டினம்

நாகை, திருவாரூரில் ரூ. 2.39 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட, திருக்குவளையில் பறக்கும் படை அதிகாரி செந்தில்குமாா் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 7:08 PM
பறிமுதல்!
பகிர்:

கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட, திருக்குவளையில் பறக்கும் படை அதிகாரி செந்தில்குமாா் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

அப்போது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது உரிய ஆவணங்களின்றி ரூ.65 ஆயிரத்தை மணலூரைச் சோ்ந்த பாக்கியராஜ் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

வலிவலம் வெள்ளையாறு பாலம் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி பாலநாகு தலைமையில் நடைபெற்ற வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி பகுதியைச் சோ்ந்த குபேந்திரன் ஆவணங்களின்றி ரூ.93 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா்: திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தப்பளாம்புலியூா் பூலம் அருகே மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, புலிவலத்தைச் சோ்ந்த பா. சக்கரவா்த்தி (41) உரிய ஆவணங்களின்றி ரூ.81,660 எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.