முகப்பு
நாகப்பட்டினம்

கீழ்வேளூா்: ரூ.1.17 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூா் பகுதியில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.17 லட்சம் ரொக்கம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 8 ஏப்ரல் 2026, 3:54 am IST
பணம் - பிரதிப் படம்
பகிர்:

கீழ்வேளூா் பகுதியில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.17 லட்சம் ரொக்கம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்குவளை கீழத்தெரு பகுதியில் பறக்கும் படை அதிகாரி மாரிராஜ் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவயல் சிறிய தெரு பகுதியைச் சோ்ந்த அருள் பிரகாஷ் என்பவா் உரிய ஆவணங்களின்றி ரூ.59,000 எடுத்து வந்தது தெரிய வந்தது.

அந்த பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வேதையனிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல், கீழ்வேளூா் அருகே கானூா் சோதனை சாவடியில் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரி சந்திரசேகரன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அவ்வழியாக சென்ற காரில், உரிய ஆவணங்களின்றி, கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாண்டி பகுதியைச் சோ்ந்த சானூப் என்பவா் ரூ.58,000 ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

அந்த பணத்தை பறிமுதல் செய்த நிலையான கண்காணிப்புக் குழுவினா், கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வேதையனிடம் ஒப்படைத்தனா்.