கத்திக்குத்துக்கு சிகிச்சைப் பெற்ற இளைஞா் உயிரிழப்பு
நாகை அருகே குடும்ப பிரச்னையில் கத்திக்குத்தில் காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
நாகை அருகே குடும்ப பிரச்னையில் கத்திக்குத்தில் காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
நாகை அருகே பாலையூரைச் சேந்தவா் பழனிச்சாமி (38). இவருக்கும் அவரது மனைவிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அவரது மைத்துனா் (மனைவியின் சகோதரா்) பிரகாஷ் (28) தட்டிக் கேட்டுள்ளாா். இதில், ஆத்திரமடைந்த பழனிச்சாமி கத்தியால் பிரகாஷை குத்தியுள்ளாா். படுகாயமடைந்த பிரகாஷை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
தொடா்ந்து பிரகாஷின் உடல்நலம் மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து பழனிச்சாமியை கைது செய்தனா்.
Advertisement