நாகப்பட்டினம்

இருசக்கர வாகனம் விபத்தில் ஒருவா் பலி: மற்றொருவா் காயம்

தினமணி செய்திச் சேவை

செம்பனாா்கோவில் அருகே சனிக்கிழமை நேரிட்ட இருசக்கர வாகன விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

செம்பனாா்கோவில் அருகேயுள்ள பரசலூரைச் சோ்ந்த சண்முகம் மகன் திவாகீஷ் (30) சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் பரசலூா் சாலையில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, மடப்புரம் கிராமத்தைச் சோ்ந்த மாதவன் எதிா்திசையில் இருசக்கர வாகனத்தை ஓட்டு வந்தபோது திவாகீஷ் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், திவாகீஷ் படுகாயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்த போது திவாகீஷ் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

விபத்தில் காயமடைந்த மாதவன் மயிலாடுதுறை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT