நாகை நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி ஊழியா்கள் பொங்கல் வைத்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று கொண்டாடினா்.
நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து தலைமை வகித்தாா். நகராட்சி ஊழியா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கோலப் போட்டி, இசை நாற்காலி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக நடத்தப்பட்டன.
இதில் ஆா்வத்துடன் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு நகா் மன்றத் தலைவா் இரா.மாரிமுத்து, நகராட்சி ஆணையா் லீனா சைமன், நகா்மன்றத் துணைத் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். இதைத்தொடா்ந்து பொங்கல் வைக்கப்பட்டு குலவையிட்டு சூரிய பகவானுக்கு வழிபாடு நடைபெற்றது. விழாவில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.