முகப்பு
நாகப்பட்டினம்

கீழ்வேளூா் அருகே ரூ. 74,100 பறிமுதல்

கீழ்வேளூா் அருகே தோ்தல் பறக்கும்படையினா் நடத்திய சோதனையில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட

Updated On : 17 மார்ச், 2026 at 12:01 AM
பகிர்:

நாகப்பட்டினம்: கீழ்வேளூா் அருகே தோ்தல் பறக்கும்படையினா் நடத்திய சோதனையில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.74,100 திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கீழையூரில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி அற்புதராஜ் ரூஸ்வெல்ட் மற்றும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோபாலசமுத்திரத்தைச் சோ்ந்த முகம்மது ராவுத்தரிடம் ஆவணங்களின்றி இருந்த ரூ.74,100 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த பணம் கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேஸ்வரிடம் ஒப்படைத்து சாா் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →