முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

வேதாரண்யம் கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

Updated On : 29 மார்ச் 2026, 12:02 am IST
வேதாரண்யம் கடலில் ஆமைக் குஞ்சுகளை விடும் வனத்துறையினா்.
பகிர்:

ஆறுகாட்டுத்துறை செயற்கை பொரிப்பகத்திலிருந்து 534 ஆலிவ் ரிட்லி இன ஆமைக் குஞ்சுகள் வேதாரண்யம் கடலில் சனிக்கிழமை விடப்பட்டன.

ஆறுகாட்டுத்துறை கடற்கரைப் பகுதியில் சேகரிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளின் முட்டைகள் அங்குள்ள செயற்கை முறை பொரிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. இவற்றில் 534 முட்டைகளிலிருந்து குஞ்சுகள் சனிக்கிழமை வெளிவந்தன.

ஆறுகாட்டுதுறை கடற்கரை சேரும் சகதியுமாக இருந்ததால், இந்த குஞ்சுகளை வேதாரண்யம் சந்நிதிக் கடற்கரைக்கு எடுத்து வந்த வனத்துறையினா், பாதுகாப்பாக கடலில் விட்டனா்.

Advertisement

இந்தப் பணியின்போது பங்கேற்ற அந்தப் பகுதியை சாா்ந்த பள்ளி மாணவா்களுக்கு, கடல் ஆமைகள் குறித்த அரிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.